TBC News Malaysia

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

தைப்பிங் சிறை வன்முறை: உயர் நிர்வாகத்தினர் மீது கடும் நடவடிக்கை தேவை – எம்.பி. வலியுறுத்தல்

Share This Article:

தைப்பிங் சிறையில் 100-க்கும் மேற்பட்ட கைதிகள் தாக்கப்பட்ட சம்பவம் மற்றும் கைதி ஒருவர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, சுஹாகாம் வெளியிட்ட அறிக்கை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட சிறை அதிகாரிகள் மற்றும் உயர் நிர்வாகத்தினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கெப்போங் எம்.பி. லிம் லிப் எங் வலியுறுத்தியுள்ளார்.

தைப்பிங் சிறை வன்முறை: உயர் நிர்வாகத்தினர் மீது கடும் நடவடிக்கை தேவை – எம்.பி. வலியுறுத்தல்

2025 ஜனவரியில் தைப்பிங் சிறையில் நடைபெற்ற வன்முறை சம்பவத்தில் 100-க்கும் மேற்பட்ட கைதிகள் தாக்கப்பட்டதுடன், ஒருவர் உயிரிழந்த விவகாரம் குறித்து சுஹாகாம் வெளியிட்ட கண்டுபிடிப்புகள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, தைப்பிங் சிறையின் உயர் நிர்வாக அதிகாரிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கெப்போங் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங் வலியுறுத்தியுள்ளார்.

சுஹாகாம் அறிக்கையில், சிறை அதிகாரிகள் அளவுக்கு மீறிய உடல் வன்முறையில் ஈடுபட்டதோடு, ஆயுதங்களும் பயன்படுத்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், கைதிகளுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட சில காவல் புகார்களில் தவறான மற்றும் பொய்யான தகவல்கள் இடம்பெற்றிருந்ததாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

இதனை “சிறைச்சுவர்களுக்குப் பின்னால் நடந்த கொடூர சம்பவம்” என்று விவரித்த லிம் லிப் எங், சம்பவத்தை மூடிமறைக்க முயன்ற நிர்வாக அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும் என்றார்.

இந்த வழக்கில் தொடர்புடைய உயர் அதிகாரிகள் மற்றும் சிறை ஊழியர்கள் மீது இடைநீக்கம், ஒழுங்கு நடவடிக்கை மற்றும் தேவையானால் குற்றவியல் வழக்குகளும் தொடரப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனவரியில் கைதிகளை ஹால் B-யிலிருந்து பிளாக் E-க்கு மாற்றும் நடவடிக்கையின் போது சுமார் 60 வார்டன்கள் கைதிகளை தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் கான் சின் எங் என்ற கைதி உயிரிழந்தார்.

சுஹாகாம் விசாரணையில், கைதிகளின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும், சம்பவத்தில் சிறை நிர்வாகத்தின் தவறுகள் தெளிவாக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், பாதுகாப்பற்ற மற்றும் சேதமடைந்த கட்டமைப்பைக் கொண்ட ‘E’ பிரிவிற்கு கைதிகளை மாற்ற சிறை நிர்வாகம் கட்டாயப்படுத்தியிருந்தது என்றும் மனித உரிமைகள் ஆணையம் கண்டறிந்துள்ளது.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions